காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக, தமாக கவுன்சிலர்கள், சுயேட்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.
திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் பதவி வகித்து வருகின்றனர். திமுக மேயர் பதவியேற்ற சில மாதங்களிலேயே அவருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம், அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று வாக்கெடுப்பு நடந்தது. இதில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் மேயருக்கு எதிரான தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings