in

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை: தீர்வு எப்போது

செங்கல்பட்டு:

அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு பொதுச் செயலாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு ரயில் நிலைய சந்திப்பில் குரங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இவை ரயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றன. அதிகமாக

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் மேம்பாலத்தை கடந்து வெளியில் செல்லும்போதும், உள்ளே வரும்போதும் அவற்றின் தொல்லை மிகவும் அதிமாக உள்ளது. இதனால் அவர் அச்சப்படும் சூழ்நிலையும், பாதுகாப்பற்று நிலையும் உருவாகிறது. இதனால் ரயில் பயணிகள் மேம்பாலத்தை ஒருவித அச்சத்துடனேயே கடக்க வேண்டிய அவல நிலை உள்ளது

.ஆகையால் ரயில்வே நிர்வாகம் உடனடியாக பொதுமக்களுக்கு அச்சத்தை நீக்கி பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் அங்கிருந்து குரங்குகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஊழலில் ஈடுபடும் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலர்

தனியார் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு முறைகள்: ஆட்சியர் ஆய்வு