பொழிச்சலூர்,
மக்களுடன் முதல்வர்- உங்கள் அரசு உங்கள் ஊரில் திட்டத்தை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், பல்லாவரம் சட்டமன்றத் உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்
செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம் பொழிச்சலூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர்… உங்கள் அரசு உங்கள் ஊரில் திட்ட தொடக்க விழா (மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நிவர்த்தி செய்யும் முகாம்) நடைபெற்றது.
விழாவிற்கு பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இ. கருணாநிதி தலைமை தாங்கினார். இத்திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அருண் ராஜ் தொடங்கி வைத்தார். இதில் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் பா.வனஜா தயாளன், துணைத் தலைவர் வி.ஜோசப், ஊராட்சி செயலர் சங்கர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அந்தந்த அரசுத்துறை அலுவலர்களிடம் மனுக்களை அனுப்பி வைத்தனர்.
பின்னர் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அருண் ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பா.வனஜா தயாளன், துணைத் தலைவர் வி.ஜோசப், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஊராட்சி செயலாளர் சங்கர் நன்றி தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings