பொழிச்சலூர்:
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார்மலை ஒன்றியம் பொழிச்சலூர் ஆறாவது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பா.வனஜா தயாளன், M.A.,M.Phil., அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கி கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த ஆறாவது வார்டு உறுப்பினர் H.உமா மகேஸ்வரி ஹேமபூஷணம், B.A., M.C அவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பா.வனஜா தயாளன் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஊராட்சி மன்ற தலைவர் பா.வனஜா தயாளன், ஒன்றிய பிரதிநிதி S.கோதண்டராமன், பொருளாளர் L.R.விஸ்வநாதன், அவைத்தலைவர் S.குருமூர்த்தி, துணைச் செயலாளர் D.நித்தியானந்தம் உள்ளிட்டோருக்கு துணைச் செயலாளர் N.மாரி (எ) ஹேமபூஷணம் நன்றி தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!