சென்னை
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பெண்கள் நாட்டின் கண்கன் என்று வர்ணிக்கும் நாடு நம்முடையது. ஆனால் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. என்னதான் சட்டம் தன் கடமையை செய்தாலும் சில காமகொடூரர்கள் அவர்கள் வழியில் பெண்களை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிக் கொண்டுதான் இருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவிகளே இதில் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் லட்சக்கணக்கான பெண்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வரும்போதும், போகும்போதும் பேருந்து நிறுத்தத்தில் நிற்கின்றனர். அப்போது காமகொடூர குணம் கொண்ட இளைஞர்கள் பெண்களை காமப்பொருளாக மட்டுமே பார்க்கின்றனர். பிறகு நடந்து செல்வதுபோல் மாணவிகளை உரசுவது, இடிப்பது, கீழே விழுவதுபோல் நடித்து மாணவிகளை தாங்கிப் பிடிப்பது என்று தங்கள் லீலைகளை காட்டுகின்றனர். இதற்கு விடிவுகாலமே இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.
பள்ளி, கல்லூரிகள் தொடங்கும் நேரம் மற்றும் முடிந்து மாணவிகள் வீட்டிற்கு செல்லும் நேரங்களில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் போலீசார் ரோந்து செல்லவும், பாதுகாப்புக்காக நிறுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு இலவச பேருந்து உள்பட பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் அரசு மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings