நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பிய 82 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் மிஷின்கள் வழங்கப்பட்டது .
ரெப்கோ வங்கி சார்பில் , தாயகம் திரும்பியோருக்காக கடந்த 1960 ஆம் ஆண்டு மத்திய அரசின் உதவியுடன் தமிழ்நாடு , கேரளா , ஆந்திரா , கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மூலமாக துவங்கப்பட்டது .
இதில் குன்னூர் கிளை ரெப்கோ வங்கி மற்றும் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குன்னூரில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் குன்னூர் கிளை மேலாளர் ஜெயபிரகாஷ் தொகுத்து வழங்கினார். அறக்கட்டளை பிரதிநிதி ரமேஷ் வரவேற்று பேசினார். அறங்காவலர் மதிவாகனம் முன்னிலை வைத்தார்.
ரெப்கோ வங்கி தலைவர் சந்தானம் ,வங்கியின் ஹோம் பைனான்ஸ் தலைவரும் மைக்ரோ பைனான்ஸ் இயக்குனருமான தங்கராஜ் ஆகியோர் தலைமையில் தாயகம் திரும்பிய 82 விதவை மகளிர்க்கு விலையில்லா தையல் மிஷின்கள் வழங்கப்பட்டது .
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து தாயகம் திரும்பி அவருக்கு மருத்துவ உதவியாக நான்கு நபர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கினார்கள்
விழாவில் ரெப்கோ வங்கி , ஹோம் பைனான்ஸ் இயக்குனர்கள் தங்கராஜ், ரகு என்கின்ற கிருஷ்ணகுமார், இன்னாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings