வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள செக் அணை அதிக மழையின் காரணமாக நிறைந்துள்ளது.
அதன் அருகே இருந்த பாலத்தின் மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் மழையின் காரணமாக அணை பகுதியில் புதிதாக அமைத்து வரும் தார் சாலை பதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை வால்பாறை நகர் மன்ற தலைவர் எஸ்.அழகு சுந்தரவள்ளி செல்வம் பார்வையிட்டார். அவருடன் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் த,ம.ச,செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சி.செல்வம்,12 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் இரா.சே. அன்பரசன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings