கரூர்:
கரூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு மற்றும் கரூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்று நடும் விழா கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் நடைபெற்றது.
மாவட்ட வனத்துறை அலுவலர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட அத்தி நாவல், மகிழும், ஆவி, மந்தாரை, ஆள், போன்ற பல்வேறு மரங்கள் நடப்பட்டது.
மரம் நடுவிழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுவு செய்தார்.
உடன் மகளிர் நீதிமன்ற நீதிபதி தங்கவேல்,குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எழில் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சொர்ணகுமார் (பொறுப்பு), மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு மற்றும் வனத்துறை கரூர் சராகம் ரேஞ்சர், தண்டபாணி, தாதம்பாளையம் ரேஞ்சர் சிவா, வனத்துறை அலுவலர்கள், நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings