திருவள்ளூர்
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று இரவு தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சிக்னலை விட்டு லூப் லைனில் ரயில் சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கர வேகத்துடன் மோதியது.
இதில் சில பெட்டிகள் சரிந்தன. சில பெட்டிகள் தீப்பிடித்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர். தற்போது அங்கு மீட்புப்பணிகள் விரைவாக நடந்து வருகிறது. இதனால் ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹவுரா – திருச்சி ரயில் எழும்பூர் வராமல் ரேனிகுண்டா, காஞ்சிபுரம், விழுப்புரம் வழியாக செல்லும், கோரக்பூர் – கொச்சிவேலி ரயில் சென்னை வராமல் ரேனிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியாக செல்லும். எழும்பூர் – ஜோத்பூர் ரயில் அரக்கோணம், ரேனிண்டா, கூடூர் வழியாக செல்லும். நெல்லை – புருலியா ரயில் அரக்கோணம் வராமல் மேல்பாக்கம், ரேனிகுண்டா வழியாக செல்லும். சென்னை – ஐதராபாத் ரெயில் சூலூர்பேட்டை வராமல் அரக்கோணம், ரேனிகுண்டா வழியாக செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings