in

திருவள்ளூர் ரயில் விபத்து: 5 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைப்பு

திருவள்ளூர்

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று இரவு தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் சிக்னலை விட்டு லூப் லைனில் ரயில் சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கர வேகத்துடன் மோதியது.

இதில் 12 பெட்டிகள் தடம் புரண்டன. சில பெட்டிகள் தீப்பிடித்தன. இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

மீட்கப்பட்ட பயணிகள் கவரைப்பேட்டை அருகே திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் பின்னர் அவர்கள் மின்சார ரயில்கள் மூலமாக சென்ட்ரலுக்கு அழைத்து வந்தனர். சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சிறப்பு ரயிலில் தர்பங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 5 உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. இதில் இயந்திரவியல், இயக்கவியல், தண்டவாள பராமரிப்பு துறை, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு, ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆகிய துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

விபத்துக்கு சிக்னல் தொழில் நுட்ப பிரச்சனை காரணமா? அல்லது மனித தவறா? வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம்

50 ஆண்டுகளுக்கு பிறகு சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம்