சென்னை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி தமிழக அரசையும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் குறித்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அஜேஷ் என்பவர் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆவடி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உத்தரவின் பேரில் எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை பிரிவின் கீழ் பட்டாபிராம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings