சென்னை:
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “கரூர் – திருச்சி பிரிவில் கரூர் – வீரராக்கியம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளன. இதையொட்டி மயிலாடுதுறையில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்குப் புறப்படும் மயிலாடுதுறை சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் (16811) நாளை வீரராக்கியம் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும்.
இந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியம் முதல் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வரை இயக்கப்படாது. மேலும் சேலம் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16812) நாளை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்குப் பதிலாக கரூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும்.
இதேபோன்று நாளை மற்றும் 25, 27-ந் தேதிகளில் ஆலப்புழாவிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாமல் போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மதியம் 12.17 மணிக்கு போத்தனூர் வந்தடையும். அங்கிருந்து 12.20 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
செல்லாமல் போத்தனூர் இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மதியம் 12.17 மணிக்கு போத்தனூர் வந்தடையும். அங்கிருந்து 12.20 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.
இதேபோல் எர்ணாகுளத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் எர்ணாகுளம் – கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (12678) நாளை மற்றும் 25, 27 ஆகிய தேதிகளில் கோவை ஜங்ஷன் வழியாகச் செல்லாமல் போத்தனூர் இருகூர் வழியாக இயக்கப்படும், இந்த ரயில் மதியம் 12.47 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.
தொடர்ந்து அங்கிருந்து 12.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GIPHY App Key not set. Please check settings