in

நாய்கள் துரத்தியதால் குடோனுக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

கரூர்:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் புள்ளிமான் ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் அந்த மானை துரத்தியுள்ளது. இதனால் பயந்துபோன அந்த மான் பல்வேறு தெருக்கல் வழியாக ஓடிவந்து அப்பகுதியில் உள்ள ஒரு குடோனுக்குள் புகுந்துள்ளது. 

பொதுமக்கள் கதவை சாற்றி காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வனத்துறையினர் புள்ளி மானை பத்திரமாக மீட்டு காட்டு பகுதிக்குள் விட்டனர். இந்த மான், கரூர் மாவட்டத்திற்கு நாமக்கல் காவிரி ஆற்றின் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் மான் எப்படி வந்துள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாநகர் பகுதியில் மான் இருப்பதை கேள்விபட்ட  பொதுமக்கள் மானை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நெருங்கும் அட்சயதிருதியை… குறையும் தங்கம் விலை

கரூரில் தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு