10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை
சென்னையில் லேசனா மழை
சென்னையின் வடபழனி, அசோக்நகர், அண்ணாநகர், கே.கே.நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை சிறிது நேரம் சேலான மழை பெய்தது. அக்னி வெயில் காலமான இப்போது சென்னையில் மழைக்காலம் போல் மேகமூட்டமாக காணப்படுகிறது.
குளம் உடைந்து வெள்ளப்பெருக்கு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சந்தனநகர் குளம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில்
50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.நம்பியூர் காவல்துறையினர், மற்றும் வருவாய் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு – கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இன்று முதல் மே 22-ம் தேதி வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது;
மேலும் பஞ்சாப், அரியானா, சண்டிகர், ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் இன்றிலிருந்து மே 24-ம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings