கோவை
கோவை மாவட்டம் கொடிசியா மைதானத்தில் தொழிலதிபர்களுடன் மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் அதில் தடவும் கிரீமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது. அதேபோல் இதனால் கம்ப்பூட்டரே குழம்பிப்போகிறது.
இனிப்புகளுக்கு 5 சதவீதமும், காரத்திற்கு 12 சதவீதமும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காபி அதிகமாக விற்பனையாகக்கூடியது. எனவே ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள் என்று கேட்டார். இதற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையே நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டதாக சமூக ஊடகங்களில்பரவியது. இதற்கு கண்டன குரல்கள் எழுந்தன.
இளைஞரின் கேள்விகள்
இந்தநிலையில் கோவை சூலூர் அருகே ஊஞ்சபாளையத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்ச்ர நிர்மலா சீதாராமன் வெளியே வந்தபோது, இளைஞர் ஒருவர், செல்போன் முக்கிய உதிரி பாகமான செமிகண்டக்டரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது என் என்று கேளவி எழுப்பினார்.
இதனால் கோபம்கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்து பிறகு நேரடியாக டெல்லிக்கு வந்து தன்னைம சந்தித்து விவாதம் நடத்துமாறு தெரிவித்தார்.
அப்போதும் அந்த இளைஞர் விடாமல் நிர்மலா சீதாராமனிடம் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். இதனை ஒளிபரப்ப வேண்டாம் என்று பத்திரிகையாளர்களை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அங்குவந்த காவல்துறையினர் அந்த இளைஞரை அழைத்துச்சென்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings