சென்னை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த 4 பேர், இளம் பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
திமுகவை சேர்ந்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி கவிதாசன் உள்பட 4 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் பெருகியிருக்கும் போதை கலாச்சாரம், பெரும் குற்றங்களுக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறது.
குற்றங்களில் ஈடுபடுபவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதாலேயே காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் போன்ற மிக மோசமான குற்றம் தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல் தமிழககாவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன.
‘போதைப் பொருள் புழக்கத்திற்கும், ஆளுங்கட்சியினர் என்பதற்காகக் குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், ஒரு சமூகமாக நாம் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிகப் பெரியது என்பதை முதல்வர் எப்போது உணர்வார்? என்று பதிவிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings