in

ஊழலில் ஈடுபடும் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலர்

பெரம்பலூர்:

ஏழைகளுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விநியோகம் செய்வதற்காக அரசால் உருவாக்கப்பட்டது தான் நியாய விலைக்கடை ( ரேஷன் கடை). இங்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பல சரக்கு பொருட்கள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் குறைவாக வழங்கப்படுகிறதா என்று அவ்வப்போது வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள், பறக்கும் படை தாசில்தார், அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பது வழக்கம்.ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் தலைகீழாகவே அனைத்தும் நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 4 தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளில் (நியாய விலைக்கடை) மாவட்ட வழங்கல் அலுவலர் (டி.எஸ்.ஓ.) சுந்தர்ராமனே நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார். இவர் குடோனுக்கு வரும் லாரிகளில் பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என்பதையே  ஆய்வு செய்யக்கூடியவர். ஆனால் இவர் மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு என்கிற பெயரில் பொருட்கள் சரியாக இருந்தும், பொதுமக்களுக்கு முறையாக பொருட்களை விநியோகம் செய்தும், கடை பணியாளர்கள் மீது ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதாகவும், இதனால் தங்கள் வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் தனி வருவாய் ஆய்வாளர்கள்,  வட்ட வழங்கல் அலுவலர்களை வழக்கமான பணியை செய்யவிடாமல் திருட்டு அரிசி விநியோகத்தை தடுக்க வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தரவிடுகிறார். இதனால் செய்வதறியாது தவிக்கும் அந்த அதிகாரிகள் மாவுமில்களாக சுற்றும் அவலம் ஏற்படுகிறது. இதனால் அவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் பணியார்கள் மீது அபராதம் விதிப்பதும், அதிகாரிகளுக்கு உரிய பணியை வழங்காமல் தொடர்பில்லாத பணியை வழங்குவதுமாக என்று நேர்மாறாக செயல்படும் மாவட்ட வழங்கல் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சென்னையில் விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களில் காணலாம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை: தீர்வு எப்போது