*குன்னூரில் இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தை: கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அச்சம்*
நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்புக்குள் வருவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக இரவு நேரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குன்னூர் வண்டிச்சோலைக்கு அருகேயுள்ள சோலடாமட்டம் கிராமத்தில் நேற்று(8.8.2024) இரவு வந்த சிறுத்தையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். சோபிநாத் என்பவரின் வீட்டின் சுவற்றில் அமர்ந்திருந்த சிறுத்தை அங்குள்ள வளர்ப்பு பூனையை தூக்கி சென்றாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுடன் வசிக்கும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் இரவு நேரங்களில் உலா வரும் இந்த சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ். நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர். A.ஜான்டிசோசா(டானியல்). 8870917777
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings