நாகர்கோவில்:
பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்யும் படங்கள் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திரமோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவரது வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
முதலில் அங்குள்ள பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் இன்று காலை விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று சூர்ய உதயத்தின்போது சூர்ய நமஸ்காரம் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார். பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் மேற்கொண்ட தியானம் மற்றும் வழிபாடு வைரலாகி வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings