in

வேட்டவலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது:1,400 ஊறல்அழப்பு

வேட்டவலம்:

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இன்று (18-ந் தேதி) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்0கணிப்பாளர் சு.ரமேஷ்ராஜ் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் ஜனார்த்தனன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது வேட்டவலம் கோட்டப்பாறை பகுதியில் உள்ள முட்புதர் அருகே கள்ளச்சாரயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், பிடாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் (34) என்பவரை மடக்கிபிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து சுமார் 140 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சுமார் 1,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சதாசிவபிரமேந்திராள் கோயிலில் பக்தர்கள் நூதன நேர்த்திக்கடன்

காவல்துறை தவறு செய்பவர்களை மட்டுமின்றி அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும், ‘ஹிஸ்டரி ஷீட்டர்’ என்று போடுவது சரியா? முறையா?