திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் முக்கிய நீராதாரங்களாக கேரளா மாநிலம் சட்டமூணார் பகுதியிலுள்ள பாம்பாறு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன.
இடுக்கி, தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள மாநிம் அணை கட்டி வருகிறது. இந்த தகவலை தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளின் ஆய்வில் இந்த தகவல் உறுதியாகியுள்ளது.
அவ்வாறு அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே கர்நாடகா மேகதாது என்னும் இடத்தில் அணை கட்டுவதால் தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ள நிலையில் கேரள மாநிலமும் அணை கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் மேலும் வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக கேரள மாநிலத்தின் அணை கட்டும் முடிவை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings