சென்னை:
கனமழை காரணமாக தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை 12.44 செமீ மழை தமிழகத்தில் பதிவாகியுள்ளது. மழையால் கடந்த 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 13 கால்நடைகள் இறந்துள்ளன. 40 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஒரு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட 136 பேர் இன்று காலை வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 4,385.40 ஹெக்டேர் பரப்பிலான நெல், சோளம், பருப்பு, எள்ளு, கடலை, பருத்தி மற்றும் கரும்பு ஆகிய வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings