பெங்களூர்:
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரியில் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் ராமசந்திரப்பா (வயது 50). இவரை மதுகிரி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் சந்திக்க வந்தார். அந்த பெண்ணுடன் டிஎஸ்பி ராமசந்திரப்பா நெருக்கமாக இருப்பதுபோன்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து நடந்த விசாரணையில் அந்த பெண் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர். நிலப்பிரச்சினை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோது டிஎஸ்பி ராமசந்திரப்பாவுக்கும் அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதும், டிஎஸ்பியுடன் அவர் நெருக்கமாக இருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த பெண் தரப்பில் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் மதுகிரி காவல் நிலையத்தில் வைத்து பெண்ணுடன் நெருக்கமாக இருந்த டிஎஸ்பி ராமசந்திரப்பாவை கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அலோக் மோகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து மதுகிரி போலீசார், டிஎஸ்பி ராமசந்திரப்பா மீது பலாத்கார வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings