வாஷிங்டன்:
கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்னும் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இந்த நோய்க்கு சுமார் 68 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
எனவே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் பல நிறுவனங்கள் ஈடுபட்ட நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு என்கிற மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்து கொரோனாவை தடுப்பதாக இருந்தது. இதையடுத்து உலகம் முழுவதும் இந்த மருந்து விநியோகம் செய்யப்பட்டு தடுப்பூசியாக அனைத்து மக்களுக்கும் செலுத்தப்பட்டது. இந்தியாவில் சீரம் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த மருந்து விநியோகம் செய்யப்பட்டு சுமார் 175 கோடி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அஸ்ட்ராஜெனகா நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனாகா நிறுவனம், தனது கோவிஷீல்டு தடுப்பூசியில் பக்கவிளைவுகள் ஏற்படுவதை ஒப்புக்கொண்டது. இந்தநிலையில் தனது தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு மருந்து செலுத்தியவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings