மாங்காடு;
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பொது மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாங்காடு நகராட்சி சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, வைகுண்ட பெருமாள் கோயில் அருகில், கெங்கையம்மன் கோயில் அருகில் பட்டு கூட்ரோடு, மற்றும் பட்டூர் பேரூந்து நிலையம் ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்ப்பதற்காக இன்று மாங்காடு நகராட்சி ஆணையர் ராணி, மேலாளர் பாலமுருகன் ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். மேலும் கோடைகாலம் முடியும் வரை தண்ணீர் பந்தல் செயல்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings