ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை 2024 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 14.9.2024 முதல் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைப்பு நல்கிய தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வலர், தொண்டு நிறுவனங்கள் பணியினை பாராட்டி கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கும் விழா நடைபெற்றது.
கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த விழாவிற்கு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் துணை தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விழாவில் சிறப்பாக பணிபுரிந்த அனைவருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகளையும் நகர்மன்ற தலைவரும், துணைத் தலைவரும், நகராட்சி ஆணையாளர் (பொ), சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா ஆகியோர் வழங்கி கௌரவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings