in

கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

சென்னை:

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கு கூடுதலாக உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. அதாவது முதற்கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3 ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4 ஆம் கட்ட தேர்தல் 13 ஆம் தேதியும், 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 20ஆம் தேதியும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25ஆம் தேதியும் நடந்து முடிந்துள்ளது.

வருகிற ஜூன் 1ம் தேதியுடன் 7ம் கட்ட வாக்குப்பதிவுடன் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைகிறது. இதையடுத்து ஜூன் 4ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் எண்ணப்படுகின்றன.

காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

இந்தநிலையில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்கு கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக பணிகளை மேற்கொள்வது இவர்களின் முதன்மை பணியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆபரேஷனுக்கு பிறகு வைகோ நலமாக உள்ளார்: துரை வைகோ

மாவட்ட கூட்டுறவு நீதிபதி என்று கூறி மிரட்டி வந்த ஜகஜால கில்லாடி