கரூர்:
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமை எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ இன்று தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதையொட்டி, வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த முகாமில் விவசாய பயன்பாட்டுக்கான பல்வேறு இயந்திர கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
விவசாயிகள் வேளாண் இந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல் மற்றும் பராமரிப்பது, பழுதுகளை கண்டறிதல் குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வேளாண்பாப் பொறியியல் துறை, விவசாய பயன்பாட்டிற்கான வேளாண் இயந்திரங்களை உழவன் செயலி ஆப் மூலம் பதிவு செய்து விவசாயிகள் எளிதாக வாடகைக்கு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
100 சதவீத மானியத்தில், இலவச மின் இணைப்புடன் ஆழ்குழாய் அமைத்தல், பண்ணைக் குட்டை அமைத்தல், 70 சதவீத மானியத்தில் சோலார் பம்பு செட் அமைத்தல் ஆகியவை ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings