சென்னை
சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மஹாவிஷ்ணு என்கிற பேச்சாளர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அவர் பேசியபோது பாவ, புண்ணியம், முன் ஜென்ம பலன்கள் என்றும், மாற்றுத்திறனாளியாகப் பிறக்க முன் ஜென்ம வினைகளே காரணம் என்றும் கூறினார். இந்த பேச்சுக்கு பள்ளியின் ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளியுடனான அந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மஹா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும் என்றார்.
மேலும் ஆசிரியர் சங்கர் தனது அறிவுக் கண் கொண்டு அந்த நபரிடம் கேள்வி எழுப்பியதை பாராட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆர். தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings