காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மயான கொள்ளை திருவிழாவின் போது பிரேம்குமார் என்பவருக்கும் உதயகுமார் பாரிவேந்தன் தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக பிரேம்குமாரின் தந்தை ராஜாராம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் உதயநிதி பாரி வேந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று உதயநிதி அவரது நண்பர்களான கிரி மற்றும் கௌதம் ஆகியோருடன் அவரது வீட்டின் அருகே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது பிரேம்குமார் தனது டூவீலரில் அதிக சத்தத்துடன் அப்பகுதியில் சுற்றி வந்ததால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் உதயநிதி அவரது நண்பர்களுடன் பிரேம்குமாரின் வீட்டுக்கு சென்று எச்சரித்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குமார் அவரது நண்பர்களான சஞ்சய், சாரதி, கிஷோர், கோபிநாத். தட்சிணாமூர்த்தி ஆகியோருடன் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படு நெல்லி கிராமத்தில் உள்ள அம்மா கோவில் அருகில் உறங்கிக் கொண்டிருந்த கிரியை அடித்து விட்டு பின்னர் உதயநிதியின் வீட்டுக்கு சென்று உதயநிதி தலை மற்றும் கழுத்தை வெட்டி கொலை செய்தனர்.
இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings