in

வால்பாறை தேயிலை தோட்டத்தில் தொழிலாளியை திடீரென தாக்கிய கரடி

வால்பாறை

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை டாடா காபிக்கு சொந்தமான தனியார் எஸ்டேட்டில் லட்சுமணன் (வயது 46) என்பவர் குடியிருந்து வருகிறார்.

 இவர் இன்று காலை 7:30 மணி அளவில் குரூப் மேலாளர் பங்களாவில் வேலைக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று மறைந்திருந்துள்ளது. இதனை கவனிக்காமல் லட்சுமணன் சென்றுள்ளார். 

கரடியின் அருகில் வந்தவுடன், அவர் மேல் திடீரென பாய்ந்த கரடி அவரை தாக்கியுள்ளது. அதில்  லட்சுமணன் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள உருளிக்கல் எஸ்டேட்டில் உள்ள பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து எஸ்டேட் மேலாளர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதிகாரிகளிடம் கரடி மற்றும் வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இச்சம்பவம் அங்கு வசிக்கும் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மீண்டும் அதிர்ச்சி… ரூ.54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை

கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து