திருமழிசை:
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி மன்ற தலைவர் உ.வடிவேல் (வயது 62). இவர் திருமழிசையிலிருந்து ஸ்ரீ பெருமந்தூரில் உள்ள தனது நிலத்தை பார்வையிட சென்றார்.
நிலத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பெங்களூர் நெடுஞ்சாலையில் மண்ணூர் கூட்ரோடு அருகில் காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
அப்போ திடீரென சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் தடுமாறி மோதிய கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த வடிவேல் அதே இடத்தில் பலியானார். ஸ்ரீ பெருமந்தூர் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துவந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்,
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings