ஆலங்குளம்:ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு காவலா குறிச்சி கிராமத்தில் பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கந்தசாமிபுரம், விருதுநகர், செல்லப்பட்டி, கிடாரகுளம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து காவலாகுறிச்சி மாடசாமி கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த கோவில் அருகில் வசித்து வரும் மற்றொரு சமூகத்தினர் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து நிதியைப்பெற்று, புதிய கோயில் கட்டுவதற்காக ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. இதனால் அந்த கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் ஊத்துமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பினர் இடையே சமாதான கூட்டம் தாசில்தார் கிருஷ்ணவேல் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் சரியான முடிவு எடுக்கப்படாமல் சமரசம் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.
மற்றொரு சமுதாயத்தினர் கோயில் கட்டிட பணியை துவங்கியதால் ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பரண பாஸ், இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அனுமதியின்றி சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பிறகு மாலை 6 மணிக்கு விடுவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings