குன்றத்தூர்:
குன்றத்தூர் நகராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகராட்சி தேரடி அருகில் நகராட்சி தலைவர் கோ. சத்தியமூர்த்தி தலைமையில் சிறுகுறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, பழரசம், மோர் ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட பிரதிநிதி லையன் குணசேகரன், வார்டு உறுப்பினர்கள் அபிபுன்னிஷா, மணிமாறன், கருணாநிதி, ராஜி, சசிகுமார், கலாவதி சங்கர், வைசல்யா தேவி ஹரி கிருஷ்ணன், வித்யா தேவி ஹரிகுமார், சந்துரு, குப்புசாமி, சாரங்கபாணி, அசோகன், பிரேம்குமார், வார்டு நிர்வாகிகள் ஜெயக்குமார், நித்தியராமன், ஜெகன், கந்தசாமி, சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings