in

நினைவேந்தலில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் புகைப்படத்தை அகற்றிய போலீசார்

விழுப்புரம்

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர்  கான்சிராம்ஜி நினைவேந்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்தை காவல்துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் தாதா சாகித் கான்சிராம் ஜியின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனுசாரிக்கப்பட்டது. இதற்காக ஆள் உயர பேனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சுவற்றில் வைக்கப்பட்டு மாலை மரியாதையுடன் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர், கான்சிராம் புகைப்படத்தை உடனடியாக எடுக்கக் கோரி எச்சரித்துள்ளனர். அரை மணி நேரத்தில் எடுத்துச் செல்வதாக பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறியும் அங்கு இருந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளி கான்சிராம் புகைப்படத்தையும், பகுஜன் சமாஜ் கட்சி கொடியையும் அங்கிருந்து பிடுங்கி கீழே வீசி உள்ளார்.

மேலும் அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளை தரைக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இது அங்கிருந்த பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி, வடக்கு மண்டல தலைவர் கோவிந்தசாமி, பொதுச்செயலாளர் துரை, பொருளாளர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் கண்ணபிரான் முருகதாஸ் உள்ளிட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் உதவி ஆய்வாளர் முரளி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முரசொலி செல்வம் காலமானார்

டாடா நிறுவனத்தின் அடுத்த நிர்வாகி யார்? ஒரு அலசல்