in

குழந்தை பெற்ற 16 வயது மாணவி மரணம்

சித்துார்:

ஆந்திராவில், 16 வயது பள்ளி மாணவி கர்ப்பிணியாகி, குழந்தை பெற்றபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் சித்தூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த, 16 வயது மாணவி கர்ப்பமாக இருந்துள்ளார்; இது, அவரது வீட்டில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.
பள்ளியில் மாணவியின் நடவடிக்கைகளைக் கவனித்த ஆசிரியர்கள், சந்தேகமடைந்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், சித்தூர் அரசு மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதனைக்காக அனுமதித்தபோது, நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது.
அறுவை சிகிச்சை வாயிலாக மாணவிக்குக் குழந்தை பிறந்தது.
மாணவியின் உடல்நிலை மோசமானதால், உடனடியாக திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்; அங்கு, மாணவி உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தாது மணல் கொள்ளை வழக்கு : சிபிஐ-க்கு மாற்றம்

3 வயது தம்பியை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்