in

விஷச்சாராயம் குடித்தவர்களில் 16 பேருக்கு ஜிப்மரில் டயாலிசிஸ்

புதுச்சேரி:

விஷச்சாராயம் குடித்து புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் 16 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புதுச்சேரி ஜிப்மரில் 19 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களது உடல்நலம் குறித்து புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜிப்மர் மருத்துவமனையில் விஷச் சாராயம் அருந்தியவர்களில் 19 பேர் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். 

அவர்களில் 3 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள அனைவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இதில் 10 பேருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. உயர்தர உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 16 பேருக்கும் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விஷசாராயம் குடித்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

1000 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் உத்தரவிட வேண்டும்: அண்ணாமலை