பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, பண்டாரவாடை ஊராட்சி, கோயில் தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரர் கோயில் அருகே ஆபிஸர் நகர் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது பைசல் (வயது 43). இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டினார்.
இரண்டு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், மூன்றாவது குழி தோண்டும்போது பண்டைய கால உலோக சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் மணிகண்டன் முன்னிலையில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அதிகாரிகள் அப்பகுதியில் தோண்டப்பட்ட இடத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் மேலும் சிலைகள் உள்ளனவா என்று தோண்டும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது சிலைகள் கிடைத்த வண்ணம் இருந்தன. மொத்தம் உலோகத்திலான 13 சிலைகள், பூஜை பொருட்கள், ஜாடி, திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இச்சிலைகள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings