ஆவடி
சென்னை அம்பத்தூர் கேகே நகர் வானகரம் ரோடு பகுதியில் வசிப்பவர் சீனிவாசன். இவரது மனைவி சரோஜாதேவி (வயது 55). இவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை செய்து வருகிறார்.
இவர் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் அம்பத்தூரில் சொந்தமாக பிரண்டிங் பிரஸ் வைத்து நடத்தி வருகிறார். எனது தம்பி வெங்கடேசன் எம்.இ. படித்துவிட்டு தனலட்சுமி சீனிவாசா இன்ஜினியரிங் கல்லூரியில் தற்காலிகமாக பிளேஸ்மென்ட் ஆபீசராக பணிபுரிந்து வருகிறார்.
திருவல்லிக்கேணியில் உள்ள ஆர்கே பெசிலிட்டி மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பங்குதாரர் என்று கூறிக்கொண்டு நல்லூரைச் சேர்ந்த சேசய்யா என்பவர் எங்கள் பிரிண்டிங் பிரஸ்க்கு பில்புக் பிரிண்ட் செய்ய வரும்போது எனது கணவருக்கு பழக்கமானார்.
அப்போது அவர் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவின் சொந்த ஊரான நெல்லூரில் உள்ள காஸ்மோர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும், அவருக்கு நன்கு பழக்கம் என்று கூறிக்கொண்டு அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை காண்பித்து எனது தம்பிக்கு மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்.
சேஷய்யா என்பவரின் நண்பர் தியாகராஜன் மற்றும் ராஜா என்பவருக்கு கவர்னரின் பிஏ விஜயகுமாருக்கு நல்ல பழக்கம் என்றும் அவருக்கு பணம் கொடுத்தால் வேலை வாங்கிவிடலாம். என்று கூறினார்.
எனக்கு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் சென்னை மண்ணடி லிங்கு செட்டி தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் ராஜா (வயது 44) ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களும் மத்திய ரயில்வே துறை அல்லது கப்பல் துறைமுகத்தில் இன்ஜினியர் வேலையை கவர்னர் கோட்டாவில் வாங்கலாம் என்று கூறி ரூ.18 லட்சத்தை கேட்டார்.
நான் முதலில் ரூ13 லட்சத்தை கொடுத்தேன். அப்போது உடன் ராஜா இருந்தார். பலமுறை வேலை சம்பந்தமாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சேஷய்யா பொறுப்பாக பதில் சொல்லாமல் மழுப்பல் பதில்களை கூறி வந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இது சம்பந்தமாக வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பி பிரஜிட் மேரி விசாரணை மேற்கொண்டார். ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் மற்றும் துணை ஆணையர் பி.பெருமாள் ஆகியோரது உத்தரவின் பேரில் தலைமறைவாக இருந்த சென்னை மண்ணடி லிங்கு செட்டி தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings