பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சிறுமியின் பெற்றோர் பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சிவகிரிபட்டியை சேர்ந்த பொன்குமார்(30) என்பவரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொன்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி காவல் உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்ய முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
GIPHY App Key not set. Please check settings