சென்னை;
சென்னையில் இன்று இரவு விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் காண முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியின் ஆராய்ச்சிப் பயணமாக விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. இந்த ஆய்வு மையம் பூமியை சுற்றி வருகிறது. இது நட்சத்திரம் போல் சிறு புள்ளியாக காட்சி அளிக்கக்கூடியது. காலை, இரவு நேரங்களில் தெளிந்த வானம் இருக்கும்போது காண முடியும்.
அந்த வகையில்இன்று இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்களுக்கு வானத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரியும். இதனை மக்கள் வெறும் கண்களால் காண முடியும். இது ஒரு நட்சத்திரம்போலவும் காட்சியளிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காண ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளதால் இதற்காக பெரியார் அறிவியல் மையம் உள்ளிட்ட இடங்களில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings