ராமநாதபுரம்
ராமநாதபுரம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் இன்று (செப். 9) மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2,735 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா ராமநாதபுரம் தனியார் மஹாலில் நடந்தது.
இவ்விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்த விழாவை கதர் வாரியத்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்பு தொகையை வழங்கினார்.
இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர், கருமாணிக்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ஒன்றிய பெருந்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகரமன்ற உறுப்பினர் ஆர்.கே.கார்மேகம், நகர மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings