கரூர்:
கரூரை அடுத்த நெருர் வடபாகம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரது வீட்டிற்கு எதிர்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் ராஜேஸ்வரி என்பவர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் தனது வீட்டில் வைத்து விற்பனை செய்து வருகிறார். பல நேரங்களில் போலீசார் இங்கு சோதனை நடத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் ராஜேஸ்வரி வீட்டிற்கு மது குடிக்க வருபர்களை ரவிக்குமார் வீட்டிற்கு அனுப்பி, ‘ராஜேஸ்வரி வீட்டில் மது விற்பனை செய்வதாக நீ தானே போலீசாரிடம் புகார் கொடுத்தாய் என்று மிரட்ட வைக்கிறார்’ என்றும், ரவிக்குமார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 5க்கும் மேற்பட்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து அவரது மனைவிடம் மது இருக்கிறதா? என்று கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜேஸ்வரி வீட்டில் அதிகாலையில் சோதனை நடத்திய போலீசார், 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து முத்துசாமி என்பவரை கைது செய்தனர். இதையடுத்து ரவிக்குமார் வீட்டிற்கு சென்ற ராஜேஸ்வரி, ரவிக்குமார் மற்றும் அவரது மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பீதியடைந்த ரவிக்குமார் தனது வீட்டிற்கு செல்லாமல் குடும்பத்துடன் வேறு இடத்தில் தங்கியுள்ளார்.
அங்கு குடியிருக்கும் பல குடும்பத்தினரும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என ரவிக்குமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings