சிதம்பரம்
சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சிதம்பரம் பழைய புவனகிரி சாலையை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகள் ஜெயசீலா (வயது 39) என்பவர் அதிரடி புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நான் நேற்று மாலை சாமி தரசனம் செய்ய சென்றேன். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் பக்தர்களிடம் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய ரூ.200 வசூலித்துக் கொண்டிருந்தனர்.
கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய எதற்காக பணம் வசூலிக்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அதகு அங்கிருந்த சில தீட்சிதர்கள் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, இதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings