பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அர்பன் மாவட்டம் பவகடா கிராம பஞ்சாயத்துத் தலைவி ஷ்ருதி (வயது 34). இவருக்கு நாகசந்திரா பகுதியை சேர்ந்த ஆடிட்டரான கோபாலகிருஷ்ணன் என்பவருடன் 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ரோஷிணி (4) என்ற பெண் குழந்தை இருந்தது.
இதனிடையே, கோபாலகிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவிலிருந்துள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்படப்பட்டு வந்துள்ளது. மேலும், ஷ்ருதியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கோபாலகிருஷ்ணன் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவிலிருந்ததால் விரக்தியடைந்த பஞ்சாயத்துத் தலைவி ஷ்ருதி இன்று குழந்தை ரோஷிணியை கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டில் உள்ள பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு ஷ்ருதியும் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்குமுன் கடிதம் ஒன்றையும் ஷ்ருதி எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஷ்ருதி, ரோஷிணி ஆகியோரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
GIPHY App Key not set. Please check settings