in

டாடா நிறுவனத்தின் அடுத்த நிர்வாகி யார்? ஒரு அலசல்

மும்பை

டாடா நிறுவனத்தை தோற்றுவித்து மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர் ரத்தன் டாடா. உலக அளவில் புகழ்பெற்ற தொழில் அதிபர். 86 வயதான இவர் நேற்று நள்ளிரவு வயது மூப்பு காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார்.

இந்த ஜாம்பவானுக்கு பின்னணியில் ஒரு காதல் கதையே உண்டு. ஒரு பெண்ணை காதல் செய்த இவர், அவர் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக பணம் சம்பாதித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் இவர் சம்பாதித்து வந்த போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துவிட்டது. தன்னுடைய காதல் முறிந்தபிறகு கடைசி வரை திருமணம் செய்துகொள்ளாமலேயே தனது வாழ்நாளை டாடா நிறுவனத்துக்காகவும், சமூக தொண்டுக்கும் அர்ப்பணித்து வந்தார்.

தற்போது ரத்தன் டாடாவுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சொத்துகள் இருக்கின்றன. இதில் பெரும் பகுதியை அறக்கட்டளைகளுக்கு எழுதி வைத்துவிட்டார். தற்போதைய அவரது சொத்து மதிப்பு ரூ.3,800 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ரத்தனின் மறைவுக்குப் பிறகு டாடா என்னும் கோட்டையை கட்டியாளப்போவது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரத்தன் டாடாவின் சித்தி மகன் நோயல் டாடா. இவருக்கு நெவில் டாடா, லியா டாடா, மாயா டாடா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே 2022ஆம் ஆண்டு டாடா குழுமங்களின் பல்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு தலைமைப் பொறுப்புகளில் அமர்ந்தனர்.

இவர்கள் மூவரில் மிகவும் இளையவரான மாயா டாடா ரத்தன் டாடாவின் வாரிசாகத் தேர்வு செய்யப்படுவார் என்று தொழில் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 34 வயதான இவர் டாடா ஆப்பர்சுனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் டாடா டிஜிட்டலில் பணியாற்றி உள்ளார். Tata Neu என்னும் செயலியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தவர். டாடா குழுமத்தின் டிஜிட்டல் முன்னெடுப்புகளைத் தொடங்கி வைத்தவர். வலிமையான தலைமைத்துவத்தையும் திட்டமிடலையும் தன் இளம் வயதிலேயே நிரூபித்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக மாயாவின் சகோதரி லியா டாடா உள்ளார். இவர், டாடாவின் இந்திய ஓட்டல் நிறுவனம் மற்றும் தாஜ் ஓட்டல்களை நிர்வகித்து வருகிறார். இவற்றை உலகளாவிய அளவுக்கு எடுத்துச் சென்றதில் லியா பெரும் பங்கு வகித்துள்ளார்.

அதேபோல நோயல் டாடாவின் ஒரே மகனான நெவில் டாடா ஸ்டார் பஜாரைக் கவனித்துக் கொள்கிறார். சில்லறை வணிகத்தை நிர்வகிப்பதில் அவரது தலைமைத் திறன் மற்றும் வணிக புத்திசாலித்தனம் ரத்தன் டாடாவால் பாராட்டப்பட்டுள்ளது.

எனவே மூவரும் டாடா நிறுவனத்தை திறம்பட நடத்திக்காட்டுவார்கள் என நம்பப்படுகிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நினைவேந்தலில் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் புகைப்படத்தை அகற்றிய போலீசார்

தொடர்விடுமுறை…7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியூர் பயணம்