in

ஒரே டிக்கெட்டில் 3 விதமான போக்குவரத்து பயணம் எப்போது?

சென்னை

சென்னையில் தற்போது சாலை போக்குவரத்து, ரயில் பயணம்,   மெட்ரோ ரயில் பயணம் என்று மூன்று விதமான பயணங்கள் நடைமுறையில் உள்ளன. மெட்ரோ ரயிலில் செல்ல ஏதுவானவர்கள் மெட்ரோ ரயிலையும், மின்சார ரயிலை பயன்படுத்த ஏதுவானவர்கள் மின்சார ரயிலையும், பேருந்து பயன்படுத்த ஏதுவானவர்கள் பேருந்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவற்றுக்கு தனித்தனியே டிக்கெட் வாங்குவதால் மூன்றிலும் பயணிக்க ஏதுவாக ஒரே டிக்கெட் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையின்படி மாநகர போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்துகள், சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள், தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக்குழுமம் அமைக்கப்பட்டது.

இந்த குழுமம் ஆலோசனையின்படி பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக வருகிற டிசம்பர் மாதம் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வகையில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வர உள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் குற்றமே…குமரி எஸ்.பி. தடாலடி

கன்னியாகுமரியில் “இல்லந்தோறும் இளைஞரணி தீவிர உறுப்பினர் சேர்ப்பு