நெல்லை
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமீர் அம்சா. இவரது மகன் செய்யது தாமின் (வயது 31). இவர் மேலப்பாளையம் விஎஸ்டி பள்ளிவாசல் அருகே ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு இவர் தனது கடையை மூடிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது கடையில் ஒரு சின்ன வேலை இருப்பதாக கூறிவிட்டு மீண்டும் கடைக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் காணவில்லை.
இதனால் பயந்துபோன அவரது தந்தை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது தாமின் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக சம்சவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும், கோப்ப நாய் வரவழைத்தும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொலை குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், செய்யது தாமின் குடும்பத்துக்கும், நெல்லை சீதபற்பநல்லூர் அருகே சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருக்கும் சீதபற்பநல்லூர் பகுதியில் நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட பகையின் காரணமாக பேச்சிமுத்துவும், அவரைச் சேர்ந்தவர்களும் செய்யது தாமினை கொலை செய்ததுள்ளதாக தெரிவித்தனர்.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings