in

வயநாடு நிலச்சரிவு பலி 31ஆக அதிகரிப்பு: 400 குடும்பங்கள் சிக்கி தவிப்பு

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, குண்டக்கை டவுன் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு ஒரே நாளில் 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

400 குடும்பங்கள் சிக்கி தவிப்பு

நிலச்சரிவு காரணமாக சூரல்மலா பகுதியில் 400 குடும்பங்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு மீட்பு, நிவாரணப் பணிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற டீக்கடைக்காரர்

3 நிலச்சரிவுகள்… 50 பேர் பலி… நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம்.