in

வைகை அணையில் நீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 57 அடியாக இருந்தது.

இந்தநிலையில் பாசனத்திற்காக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாசன கண்மாய்களில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்னபடி 15 நாட்களுக்கு 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக கடந்த 10ந் தேதி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலையுடன்தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று காலை முதல் சிவகங்கை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்ததன்படி இரண்டாம் கட்டமாக சிவகங்கை மாவட்ட தேவைக்காக வினாடிக்கு1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வருகிற 19ம் தேதி வரை 4 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் விடப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஆட்சி அமைக்கப்போவது பாஜகவா, இண்டியா கூட்டணியா:கெஜ்ரிவால் கருத்து

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தற்கொலை